கடவுளே எனக்கு கட்டளையிடுவாய்
திசை எங்கும் உன் ஒளியே காணவைத்தாய்
கேட்கும் ஒலி எங்கும் உன் குரலே
செவிதனில் நிறைய வைத்தாய்
நான் பேசும் மொழிஎங்கும்
உன் நாமம் திருநாமம் ஒலிக்க வைத்தாய்
உண்ணும் உணவில் நிறைந்து அருளினாய்
செல்லும் வழியெங்கும் என்னை சூழ்ந்து கொண்டாய்
என் உயிரின் உட்பொருள் ஆனாய்
உன்பால் என்னை ஆட்கொண்டாய்
நெஞ்சம் கனல் கொள்கிறதே
எத்தனை காலம் தான் நீ
என்னை கனவினிலேயே வாழவைப்பாய்
என்னை ஏன் வஞ்சிக்கிறாய்
நித்தம் உன் திருவடி கொள்கிறேன்
என்னை ஏன் பித்தனாக்குகிறாய்
வெறுமை , புலம்பல்
தூக்கமில்லா இரவுகள்; விழிப்பில்லா பகல்கள்
எந்தன் இறைவா
போதும் உந்தன் சோதனை
கடவுளே
என் வழிதனை திறந்து விடுவாய்
உனது வேத மொழிதனை
மக்களுக்கா செயலாற்றிட
கடவுளே எனக்கு கட்டளையிடுவாய்..........
No comments:
Post a Comment